அருமையான தகவல்கள் எதில் ? சமூகவலையா புத்தகமா ? எது பயன் குறைவு ?
ஒரு புத்தகம் முழுவதும் படித்தால் அதன் பிறகு நாம் என்ன "ஃபாலோ அப்" செய்கிறோம்? நாம் செய்யத் தவறியது என்ன? 😊
காரணம் : அவைகளை நாம் சந்தித்தோமே தவிர அவற்றுடன் நாம் பழகவில்லை!
எவ்வளவு நல்ல தகவலாக இருந்தாலும், சமூக வலையிலும் புத்தகத்திலும் படிப்பது மட்டுமே நம் பழக்கத்தையும் வாழ்க்கை நோக்கத்தையும் மாற்றி விடாது.... என்ன தவறு செய்கிறோம் ?
![]() |
image courtesy: i.ytimg.com |
- படிக்கும் போது, முக்கியமான புள்ளிகளை மனதிலும் நோட்டிலும் குறித்துக் கொள்வதில்லை.
- படிப்பதில் முழு கவனம் செலுத்துவதில்லை.
- புத்தகத்தை மீண்டும் இரண்டாம் தடவை விரைவில் வாசிப்பதில்லை.
- படித்த பிறகு அவற்றை மூளையில் நினைவு கூர்வதில்லை (பிடித்த உணவை சாப்பிட்டபின் அதன் சுவை நம் நாக்கிலும் மனதிலும் மீண்டும் ருசித்துக் கொள்வதில்லையா?)
- முதல் முறை படித்து முடிக்கவே அதிக நேரம் எடுத்துக் கொள்கிறோம் அல்லது முடிக்கவேயில்லை.
- புத்தகங்களில் படித்த ஒரு ஐடியா அல்லது தீர்வை "இதை நாம் எப்படி பயன் படுத்தலாம்" என அப்போதே (படிக்கும்போதே) யோசிப்பதில்லை.
- புத்தகத்திலிருந்து வரும் கதைகளை நினைவு செய்து நம் வாழ்க்கை செயலுடன் தொடர்பு செய்வதில்லை.
- புத்தகத்தில் சொன்ன நடைமுறை பயிற்சிகள் அல்லது சோதனைகளைச் செய்யவில்லை.
- பழைய உருப்படாத பழக்கங்களுக்குத் திரும்பிவிடாமல் இருக்க நடவடிக்கைகளை தொடரவில்லை.
